DMK
குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்!
தமிழகம் முழுவதும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கும் சூழ்நிலையும், பணம் கொடுத்தாலும் தண்ணீர் இல்லை என்கிற சூழ்நிலையுமே நிலவுகிறது.
அத்தியாவசியமாக உள்ள குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலில்படி பொதுமக்களோடு இணைந்து தி.மு.கவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
குடிநீர் பஞ்சத்தை போக்காத எடப்பாடி அரசுக்கு எதிரான போராட்டம் நாளை (ஜூன் 24) காலை நடைபெறும் என சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!