DMK
குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்!
தமிழகம் முழுவதும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கும் சூழ்நிலையும், பணம் கொடுத்தாலும் தண்ணீர் இல்லை என்கிற சூழ்நிலையுமே நிலவுகிறது.
அத்தியாவசியமாக உள்ள குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலில்படி பொதுமக்களோடு இணைந்து தி.மு.கவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
குடிநீர் பஞ்சத்தை போக்காத எடப்பாடி அரசுக்கு எதிரான போராட்டம் நாளை (ஜூன் 24) காலை நடைபெறும் என சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இதுபோன்ற பிரதமர் நமக்கு வேண்டாம்... சிந்தித்து வாக்களியுங்கள் - பட்டியலிட்டு மோடியை விமர்சித்த துருவ் ரதீ
-
சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!
-
“பாஜகவிடம் இருந்து அனைத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” - தேஜஸ்வி தாக்கு !
-
பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !
-
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!