DMK
தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பால் உத்தரவை திரும்பப்பெற்றது தென்னக ரயில்வே!
ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருக்கக்கூடாது என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த உத்தரவிற்கு, தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற தெற்கு ரயில்வே உத்தரவை கண்டித்து மத்திய சென்னை தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, ரங்கநாதன், ரவிச்சந்திரன் என தி.மு.க.வினர் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று மனு அளித்தனர். அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற உத்தரவை தெற்கு ரயில்வே உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தி.மு.க வலியுறுத்தியது.
இதையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறுதலாக வந்த அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் தென்னக ரயில்வே பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!