DMK
ஸ்டெர்லைட் விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - கனிமொழி எம்.பி உறுதி!
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,
வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு பெட்டிகள் மாற்றுவதற்கான காரணம் குறித்து நேற்று மனு அளித்திருந்தோம், தற்போது தேர்தல் ஆணையம் சில விளக்கங்கள் கொடுத்துள்ளனர். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றும் போது அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். அதேபோல் இது தவறான முன்னுதாரணம் என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடி சம்பவம் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து பேசிய அவர், சூழலியல் ஆர்வலர் முகிலன் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களிடமே பேசினார், தற்போது அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை எனக் கூறினார்.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!