DMK
ஸ்டெர்லைட் விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - கனிமொழி எம்.பி உறுதி!
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,
வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு பெட்டிகள் மாற்றுவதற்கான காரணம் குறித்து நேற்று மனு அளித்திருந்தோம், தற்போது தேர்தல் ஆணையம் சில விளக்கங்கள் கொடுத்துள்ளனர். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றும் போது அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். அதேபோல் இது தவறான முன்னுதாரணம் என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடி சம்பவம் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து பேசிய அவர், சூழலியல் ஆர்வலர் முகிலன் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களிடமே பேசினார், தற்போது அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை எனக் கூறினார்.
Also Read
-
பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டிலான இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சி மையம்!” : முதலமைச்சரின் 2 அதிரடி அறிவிப்புகள்!
-
மதுரை அலங்காநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசு!
-
“ரொக்கமாக…நேரடியாக…ஒரு நொடியும் தாமதமின்றி!” : பொங்கல் பரிசு குறித்து அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்!
-
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் AI கேமராக்கள்! : பெங்களூருவில் மீண்டும் IPL போட்டிகள் நடைபெறுமா?