DMK
பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கும்- கனிமொழி எம்.பி திட்டவட்டம்
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை பலரையும் கவலையடைச் செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் கனிமொழி எம்.பி தலைமையில் திமுக-வினர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இதற்காக கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், கோவை வருவாய் கோட்டாச்சாரியார் ரவிக்குமாரிடம் அனுமதி கோரினார்.
ஆனால் அவர் தேர்தல் விதிகளை காரணம் காட்டி, திமுக-வின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதுதொடர்பாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, போலீஸ் அனுமதிக்காவிட்டாலும் பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கும் என்று கூறினார்.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!