Cinema
பில்லா முதல் விடாமுயற்சி வரை - பிரபல கலை இயக்குநர் மிலன் திடீர் மரணம் : சோகத்தில் திரையுலகம் !
தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் கலை இயக்குநர்கள். இதில் முக்கிய கலை இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்டவர் மிலன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று எண்ணி, பிரபல கலை இயக்குநரான சாபு சிரில் என்பவரிடம் உதவி கலை இயக்குநராக பணியாற்றினார். அவருடன் அஜித்தின் சிட்டிசன், வில்லன், ரெட், விஜயின் தமிழன், விக்ரமின் அந்நியன் உள்ளிட்ட படங்களில் உதவியாக பணியாற்றினார்.
இதைத்தொடர்ந்து கடந்த 2006-ல் ஆர்யா நடிப்பில் வெளியான 'கலாபக் காதலா' படத்தில் பணியாற்றினார். அங்கு தொடங்கிய இவரது பணி, பில்லா, வேட்டைக்காரன், வீரம், ரோமியோ ஜூலியட், வேதாளம் உள்ளிட்ட பல ஹிட் படங்களிலும் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதில் பெருவாரியான படங்கள் அஜித்தின் படமே ஆகும்.
இந்த நிலையில், இவர் தனது அடுத்த படமாக மீண்டும் அஜித்துடன் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்துள்ளார். இவருக்கும் அஜித்துக்கும் நீண்ட கால நட்புறவு உள்ளது. இந்த சூழலில் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு பணிகளுக்காக படக்குழு அஜர்பைஜான் சென்றுள்ளது. அதற்காக இவரும் அங்கே சென்றுள்ள நிலையில் இன்று அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கலை இயக்குநர் மிலன் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி, உள்ளிட்ட படக்குழு மிலன் உடல் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் உள்ளதாகவும், விரைவில் அவரது உடல் இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆயிரத்தில் ஒருவன், சர்க்கார், தர்பார், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த ஆண்டு அக்டோபரில் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!