Cinema
சந்திரமுகி 2 : காணாமல் போன 20 நிமிட காட்சிகள்.. தேதி மாற்றத்துக்கு இதுவே காரணம்.. உண்மையை உடைத்த பி.வாசு!
மலையாளத்தில் ஷோபனா, மோகன்லால் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான திரைப்படமான 'மணிச்சித்ரதாழு'-வை, தமிழில் இயக்குநர் பி.வாசு 'சந்திரமுகி' என்ற பெயரில் இயக்கினார். கடந்த 2005-ல் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வினீத், வடிவேலு, ஷீலா, நாசர், கே.ஆர். விஜயா, மாளவிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பாடலும் படமும் பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்த நிலையில், அப்போதே இதன் வசூல் 75 கோடி தாண்டி அள்ளிக் குவித்தது.
திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழகத்தில் சுமார் 890 நாட்கள் தியேட்டரில் திரையிடப்பட்டு பெரிய சாதனையை செய்தது. இன்றளவும் பேசப்பட்டு, ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டு வரும் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு இதன் அடுத்த பாகம் வெளியாகவுள்ளது.
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில், வடிவேலு, ராதிகா, ரவி மரியா, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு இயக்கியுள்ளார்; RRR படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியான நிலையில், கடந்த 15-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென சில தொழில்நுட்பம் காரணமாக இந்த படம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி வரும் 28-ம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இதன் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று ஐதராபாத்தில் இதன் ப்ரோமோஷன் நடந்தது. இதில் இந்த படத்தின் இயக்குநர் பி.வாசு கலந்துகொண்டார். அப்போது படம் வெளியீட்டு தாமதம் குறித்து பத்திரிகையாளர் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த வாசு, 480 ஷாட்ஸ் காணாமல் போனதுதான் தாமதத்துக்கு காரணம் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, "சந்திரமுகி 2 படம் செப்.15-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னதாக, அதாவது 8-ம் தேதி எனக்கு போன் செய்து, படத்தில் உள்ள 480 ஷாட்ஸ் (எடுக்கப்பட்ட சீன்கள்) காணாமல் போய்விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு எனக்கு ஒரே அதிர்ச்சி. தொடர்ந்து 150 டெக்னீஷியன்ஸ் கொண்ட குழு தீவிரமாக தேடினர்.
கடினப்பட்டு ஒரு வழியாக தேடி 4 - 5 நாட்களில் காணாமல் போன காட்சிகளை கண்டுபிடித்தனர். அதன் பின்னரே எடிட்டிங் பணிகளுக்கு அனுப்பி அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தற்போது படம் வெளியீட்டு தேதி 28 என்று அறிவிக்கப்ட்டுள்ளது" என்றார். இவரது இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது 480 ஷாட்ஸ், அதாவது சுமார் 20 நிமிடங்கள் காட்சிகளை காணவில்லை என்று அவர் கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?