Cinema
“கலைஞரை சந்தித்த அந்த நாள்.. PS-ல் வசனம் பேசியதே அவரால்தான்..” - சுவாரஸ்யத்தை பகிர்ந்த நடிகர் ஜெயம் ரவி !
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் கழகம் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட இளைஞரணியின் முன்னாள் அமைப்பாளர் மகேஷ்குமார் தலைமையில், கொளத்தூர் ஜி.கே.எம் காலணி மைதானத்தில் "கலையின் சாதனை கலைஞர், காலம் வியக்கின்ற தலைவர்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி, நடிகர் எம்எஸ்.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர் ப.ரங்கநாதன், கொளத்தூர் பகுதிச் செயலாளர்கள், நாகராஜன், ஐ.சி.எப்.முரளி, சென்னை மாநகராட்சி 6-வது மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் ஜெயம் ரவி, "கலைஞர் தற்போது இல்லை என்றாலும், அவரின் கருத்துகள் என்றும் நிலைத்து நின்று கொண்டு இருக்கிறது. நான் இங்கு கட்சி சார்ந்து இல்லாமல், கலை சார்ந்து வந்துள்ளேன். இருப்பினும் சினிமா என்ற கட்சி சார்ந்தே வந்துள்ளேன். கலைஞரின் முதல் கட்சியே சினிமா தான்.
கலைஞர் கையால் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வாங்கியது மறக்க முடியாத மகிழ்ச்சியான நாள். நான் பொன்னியின் செல்வன் படத்தில் செந்தமிழ் பேச வேண்டும் என்ற போது, கலைஞரின் எழுத்துகள், வசனங்கள் படித்து தான் நான் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தேன்.
ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்றால், கலைஞரை பொறுத்தவரை ஒரு சோறு என்றால் அது பராசக்தி தான். பராசக்தி படத்தில் அரசியல், சமூகம், சமூக அரசியல் என அனைத்தும் இருந்தது. பராசக்தி படம் குறித்தே இந்த நிகழ்ச்சி முழுவதும் பேசலாம்.
போகும் போது யாரும் எதையும் எடுத்து செல்ல முடியாது. ஆனால் கலைஞர் போகும் போது பேனாவை உடன் எடுத்து சென்றுள்ளார். வானில் அவர் தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கிறார். கலைஞரின் வளர்ப்பு எப்படி உள்ளது என்று முதலமைச்சரை பார்த்தால் தெரியும்." என்றார்.
Also Read
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!