Cinema
மக்கள் வரவேற்பை பெரும் முடிசூடா 'மாமன்னன்'.. படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு !
தமிழில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர்தான் மாரி செல்வராஜ். கடந்த 2018-ல் வெளியான 'பரியேறும் பெருமாள்' படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர், தனது முதல் படத்தையே மிகப்பெரிய வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ல் கர்ணன் படத்தை இயக்கினார். "கண்டா வரச்சொல்லுங்க.." "வுட்றாதீங்க எம்மோ.." ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க, இந்த படமும் மாபெரும் ஹிட் கொடுத்தது. இந்த இரண்டு படங்களும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரிய ஹிட் கொடுத்துள்ள நிலையில், 3-வதாக உதயநிதியை வைத்து 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கினார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருமாவான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வெளியானது. தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. சமூக நீதி பேசியிருப்பதாக படத்தை பார்த்த மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த படம் வெளியாகி 2 நாட்களே ஆகும் நிலையில், சுமார் 5 கோடிக்கு மேலாக வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் தற்போது திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக காணப்படும் நிலையில், இதன் வெற்றியை படக்குழு கொண்டாடியுள்ளனர்.
இந்த படத்தின் வெற்றியை கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரகுமான், மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டலின் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக வெளியான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Also Read
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!