Cinema
600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை மறைவு.. அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம் !
ரவீந்திரனான இவர் ஒரு மேடை நாடக கலைஞர் ஆவார். 1975 -ல் வெளியான Bhaaryaye Aavashyamundu என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். காமெடி முதல் பலவகையான கேரக்டரில் நடித்துள்ள பூஜப்புரா ரவி, ஒரு தயாரிப்பாளரும் ஆவார். மலையாளத்தில் வெளியான கருப்பு - வெள்ளை திரைப்படங்களில் சிலவற்றை தயாரித்துள்ளார்.
இளம் வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைத்து கொண்டார். இவர் மலையாள திரையுலகில் மூத்த பழம்பெரும் நடிகராக கருதப்படுகிறார். திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இறுதியாக 2016-ல் வெளியான Guppy என்ற படத்தில் சின்னப்பன் என்ற கதாபாத்திரத்திலும், Darvinte Parinamam என்ற படத்தில் பாதிரியாராகவும் நடித்திருந்தார்.
தற்போது 86 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக இடுக்கியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று அவரது வீட்டில் வைத்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!