Cinema

“இதனால் தான் எங்களுக்குள் பிரச்னை உருவானது..” - சமந்தா பிரிவு குறித்து நாக சைதன்யா சொன்ன பகீர் காரணம் !

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர், அத்தனை மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். சினிமா ஒரு புறம் இருக்க, காதலும் ஒரு புறம் இருந்தது. பல ஆண்டுகளாக இவரும் பிரபல தெலுங்கு திரை நட்சத்திரமான நாக சைதன்யாவும், காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

சுமூகமாக இருந்த இவர்களது உறவு கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருவரும் அவர்களது தனித்தனி வாழ்க்கையில் சினிமா, சீரிஸ் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியில் வெளியான 'The Family Man 2' சீரிஸின் மூலம் பாலிவுட்டில் சமந்தா மிகவும் பிரபலமானார் . இவர்களின் விவாகரத்திற்கு இந்த சீரிஸும் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

இவர்கள் விவாகரத்தை தொடர்ந்து, தான் மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூனே (autoimmune disorder) பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமந்தா பகிரங்கமாக அறிவித்தார். இவருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா, ஆகிய படங்கள் வெளியாகி தற்போது அடுத்து குஷி படம் வெளியாக தயாராக உள்ளது.

தற்போது இவர் உடல் மெலிந்து காணப்படும் நிலையில், இவர் எங்கு சென்றாலும், அவரது விவாகரத்து குறித்தே கேள்வி எழுப்ப படுகிறது. இதனால் அவர் தன்னை மெய்மறந்து கண்கலங்கி விடுவார். ஒவ்வொரு தடவையும் சமந்தாவிடம் இதுகுறித்து கேட்கும்போது அவர் கூறும் பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் தற்போது தங்கள் விவாகரத்துக்கு சமூக வலைதளங்கள் மூலம் பரவும் வதந்தி தான் காரணம் என்று நாக சைதன்யா கூறியுள்ளார். இதுகுறித்து கஸ்டடி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், "சமந்தா எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் இருவரும் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. சட்டப்படி விவாகரத்து பெற்று ஓராண்டு ஆகிறது. நான் சமந்தாவோடு சேர்ந்து வாழ்ந்த நாட்களை மதிக்கிறேன் .

உண்மையில் சமந்தா மிகவும் நல்ல பெண். சமூக வலைத்தளங்களில் வந்த வதந்தி காரணமாகத்தான் எங்கள் இருவர் இடையே கருத்து வேறுபாடு ஆரம்பம் ஆனது. அது மெல்ல மெல்ல பெரிதாகி கடைசியில் பிரிந்து விட வேண்டிய நிலைமை வந்தது. முதலில் நான் அந்த வதந்தி செய்தியை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு நிலைமைகள் மாறிவிட்டன.

நாங்கள் பிரிந்து விட்டாலும் ஒருவர் மேல் ஒருவர் நல்ல மரியாதை வைத்திருக்கிறோம். சமூக வலைதளங்களில் எங்களின் கடந்த காலத்தில் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மூன்றாவது நபரை இதற்குள் இழுத்து அவரை அவமரியாதை செய்தனர். என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்கிறேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றார்.

முன்னதாக காபீ வித் கரண் என்ற பாலிவுட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா, தனது விவாகரத்துக்கு இது போன்ற சமூக வலைதளங்களும் ஊடகங்களும் தான் காரணம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “நா அப்படி சொல்லவே இல்ல..” : நாக சைதன்யா - சோபிதா Dating விவகாரம் குறித்து சமந்தா கூறியது என்ன ?