Cinema
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!
மலையாள சினமா உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் மாமுக்கோயா. இவர் நேற்று மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியைத் துவக்கி வைத்தார்.
அப்போது அங்கிருந்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். இதனால் அவரை மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அப்போது மாமுக்கோயா திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த நகைச்சுவை நடிகர் மாமுக்கோயாவுக்கு மலையாள சினிமா உலகம் மட்டுமல்லாது இந்திய சினிமா உலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.
450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மாமுக்கோயா இரண்டு முறை மாநில அரசு விருதுகளைப் பெற்றுள்ளார். 'தூர் தூரே ஒரு கூடு கூட்டம்', 'காந்திநகர் இரண்டாவது தெரு', 'நாடோடிக்காட்டு', 'வடக்குநோக்கியந்திரம்', 'கிரீடம்', 'பட்டணப்பிரவேசம்', 'உன்னிகளே ஒரு கதைப் பராயம்', 'ஒப்பம்', 'ஒருவர்' ஆகியவை அவரது பிரபலமான படங்கள்.
இவர் மலையாளம் மட்டுமல்லாது தமிழில் 'அரங்கேற்றவேளை', 'காசு','கோப்ரா' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Also Read
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!
-
”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!