Cinema

சினிமாவில் அனைத்தையும் இழந்த பிரபல தயாரிப்பாளர்..இறுதியில் மருந்துக்கு கூட பணமில்லாத நிலையில் சூர்யா உதவி

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக அமைந்திருப்பவர்தான் பாலா. இவரது இயக்கத்தில் 3-வதாக வெளியான திரைப்படம்தான் 'பிதாமகன்' கடந்த 2003-ம் ஆண்டு சூர்யா, லைலா, விக்ரம், தனம் சங்கீத உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய அளவு பெயர் பெற்றது.

இந்த படத்தை தயாரித்தவர்தான் வி.ஏ.துரை. எவெர்க்ரீன் மூவி இன்டெர்நேஷனல் (Evergreen Movie International) என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்திற்கு தயாரிப்பாளர் ஆனார். முன்னதாக சத்யராஜின் 'என்னமா கண்ணு', 'லூட்டி', சூர்யாவின் 'நந்தா', 'மாயாவி', ஆர்யாவின் 'நான் கடவுள்', விஜய் காந்தின் 'கஜேந்திரா' உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.

முன்னதாக பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இவர், இந்த படங்கள் தயாரித்தன் மூலம் எந்தவொரு லாபமும் கிடைக்கவில்லை. எனவே திரையுலகில் இருந்து சற்று விலகியே இருந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக இவர் சர்க்கரை நோயால் அவதி பட்டுவந்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது சிகிச்சைக்கு பணமில்லாத காரணத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். இதனால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது நண்பர் உதவியோடு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று வீடியோ வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், "நான் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதனால் காலில் உள்ளே எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டு இருக்கிறது. கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் உள்ளது.

என்னை கவனித்துக் கொள்ள ஆளில்லாத பரிதாபமான நிலைமையில் இருக்கிறேன். மருந்து வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் தவித்து வருகிறேன். அதனால் யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் “ என்று உருக்கமாக பேசியுள்ளார். இவரது இந்த வீடியோ திரை பிரபலங்களுக்கு அதிகாமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தன்னை வைத்து படங்களை தயாரித்த தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிலைமையை அறிந்த சூர்யா உடனே அவருக்கு மருத்துவ செலவுக்காக ரூபாய் 2 லட்சம் கொடுத்து உதவி செய்து உள்ளார். சூர்யாவின் இந்த செயல் தற்போது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Also Read: “என்னால அதுல இருந்து இன்னும் மீள முடியல..” - நூலிழையில் உயிர் தப்பிய AR ரகுமானின் மகன் : நடந்தது என்ன ?