Cinema
பொம்மை நாயகி : “இதுக்காக நான் ரோடு ரோடா அலைஞ்சிருக்கேன்..” - நடிகர் யோகி பாபு உருக்கம் !
கடந்த 2009-ம் ஆண்டு தமிழில் வெளியான 'யோகி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாபு. அது இவருக்கு கைகொடுக்க, திரை வட்டாரத்தில் யோகி பாபு என்று அழைக்கப்பட்டு வருகிற. அதன்பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் 'யாமிருக்க பயமே' படத்தில் 'பன்னி மூஞ்சுவாயனாக நடித்து மிகவும் பிரபலமானார்.
அதை தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்த இவர், முதல் முறையாக 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நயன்தாரவுக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அது மாஸ் ஹிட் கொடுக்க, அதன்பின்னர் இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மண்டேலா' படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகனாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.
நடிப்பில் முழுக்க முழுக்க பிசியாக இருக்கும் இவர், தற்போது சுமார் 20 படங்கள் தனது கைவசம் வைத்துள்ளார். அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் கிச்சா என்ற காமெடி ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து அயலான், சலூன், பூமர் அங்கிள், சதுரங்க வேட்டை 2 என தொடர் படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் யோகி பாபு, பேபி ஸ்ரீமதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள பொம்மை நாயகி (Bommai Nayagi) படம் வரும் 3-ம் தேதி வெளியாகிவுள்ளது. இயக்குநர் ஷான் இயக்கத்தில் உருவான இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று பொம்மை நாயகி படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் யோகி பாபு, ஷான், பா. ரஞ்சித் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் யோகி பாபு படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தான் முன்பாக அட்டக்கத்தி படத்தில் நடிக்கவே தனக்கு கால் ஷீட் இல்லை என்றும் சிரித்து கொண்டே கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எல்லா மேடைகளிலும் என்னை நான் காமெடியன் என சொல்வதற்கு காரணம், அதுதான் என் தொழில்; நான் ஒரு காமெடியன் ஆகவேண்டும் என்பதற்காகதான் தெரு தெருவாக வாய்ப்பு தேடி அலைந்தேன். பலரும் என் முகத்தை கிண்டல் செய்துள்ளனர்.
மேக்கப் போடும்போது திட்டியுள்ளனர். இதெல்லாம் எல்லா நடிகர்களுக்கும் நடப்பதுதான், எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நடந்துள்ளது. எப்பவுமே என் முகம் ஜோக்கர் முகம்தான். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த சினிமாவுக்கு சென்றாலும் நான் ஒரு காமெடியன்தான்." என்றார்.
Also Read
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!