Cinema
விரைவில் உருவாகும் சுந்தர் சி-யின் அரண்மனை 4.. கதாநாயகனாக இந்த நடிகரா ? - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
தமிழில் முன்னணி இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான முதல் ஹாரர் படம்தான் அரண்மனை. 2014-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சுந்தர் சி, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படத்தை தொடர்ந்து இதன் அடுத்த பாகம் எடுக்கப்பட்டது.
அதன்படி 2 ஆண்டுகள் கழித்து 2016-ம் ஆண்டு வெளியான அரண்மனை 2 படத்தில் ஹன்சிகா, சித்தார்த், திரிஷா, சுந்தர் சி, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரிதளவு வெற்றி பெறவில்லை என்றாலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாகவே இது கருதப்பட்டது.
பின்னர் இதன் அடுத்த பாகமாக கடந்த 2021-ம் ஆண்டு அரண்மனை 3 வெளியானது. அந்த படத்தில் ராஷி கண்ணா, ஆர்யா, சுந்தர் சி, ஆண்ட்ரியா, விவேக், சம்பத் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்போது அரண்மனை 4-ம் பாகம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு இந்த படத்தில் விஜய் சேதுபதி, பிரியா பவானி சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுந்தர் சி - தலைநகரம் 2, வல்லான், ஒன் டு ஒன் ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது அரண்மனை படத்தின் அடுத்த பாகம் குறித்து வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!