Cinema
விரைவில் உருவாகும் சுந்தர் சி-யின் அரண்மனை 4.. கதாநாயகனாக இந்த நடிகரா ? - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
தமிழில் முன்னணி இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான முதல் ஹாரர் படம்தான் அரண்மனை. 2014-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சுந்தர் சி, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படத்தை தொடர்ந்து இதன் அடுத்த பாகம் எடுக்கப்பட்டது.
அதன்படி 2 ஆண்டுகள் கழித்து 2016-ம் ஆண்டு வெளியான அரண்மனை 2 படத்தில் ஹன்சிகா, சித்தார்த், திரிஷா, சுந்தர் சி, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரிதளவு வெற்றி பெறவில்லை என்றாலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாகவே இது கருதப்பட்டது.
பின்னர் இதன் அடுத்த பாகமாக கடந்த 2021-ம் ஆண்டு அரண்மனை 3 வெளியானது. அந்த படத்தில் ராஷி கண்ணா, ஆர்யா, சுந்தர் சி, ஆண்ட்ரியா, விவேக், சம்பத் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்போது அரண்மனை 4-ம் பாகம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு இந்த படத்தில் விஜய் சேதுபதி, பிரியா பவானி சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுந்தர் சி - தலைநகரம் 2, வல்லான், ஒன் டு ஒன் ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது அரண்மனை படத்தின் அடுத்த பாகம் குறித்து வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!