Cinema

இலையும் முள்ளும் to பாலிவுட் படம் வரை.. பிரபல மலையாள இயக்குனர் கே.பி.சஷி மறைவு : திரையுலகத்தினர் இரங்கல்!

மலையாள சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் கே.பி.சஷி. எழுத்தாளரும், மார்க்சிய சிந்தனையாளருமான கே.தாமோதரனின் மகன் கே.பி.சஷி ஆவர். இவர் 1994லில் வெளிவந்த இலையும் முள்ளும் படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் அப்படம் பெரும் வெற்றியை பெற்றதன் மூலம் அவருக்கு தேசிய விருதும் கிடைக்க செய்தது.

அதுமட்டுமல்லாது பல்வேறு புகழ்பெற்ற ஆவணப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.1970லில் டெல்லி ஜே.என்.யுவில் கார்ட்டூன் துறையில் பணியாற்றினார். அதுமட்டுமல்லாது 2003ம் ஆண்டு வெளியான ஏக் அலக் மெளசம் படத்திலும் நடித்து பாலிடிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார்.

பல்வேறு தவிர்க்க முடியாத முக்கிய படங்களை கொடுத்தவர் கே.பி.சஷி. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் மோசமானதைத்தொடர்ந்து திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கே.பி.சஷி உயிரிழந்தார். அவரது மறைவு சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியநிலையில், அவருக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: மகாகவி பாரதியாரின் பேத்தி திடீர் மறைவு.. தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் ! - யார் இந்த லலிதா பாரதி ?