Cinema
பருத்திவீரன் 2 : “ரெண்டு பேரும் செத்து போய்ட்டாங்க.. எங்க இருந்து கூட்டி வாறது..” - இயக்குநர் அமீர் கலகல!
பிரபல இயக்குநர் அமீர், தற்போது ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் சாந்தினி, ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ப்ரோமோஷனை முன்னிட்டு நேற்று இயக்குநரும், நடிகருமான அமீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பருத்திவீரன் அடுத்த பாகம் குறித்த கேள்விக்கு, 'பருத்திவீரன் 2' வராது என்று கலகலப்பாக பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாலா இயக்கத்தில் இருந்து சூர்யா விலகிய உண்மையில் 'வணங்கான்' படம் தொடங்கியதும் தெரியாது; அது drop ஆனதும் தெரியாது. தெரியாத ஒன்றை பற்றி கருத்து சொல்வது அநாகரீகம். இயக்குநர் பாலாவுக்கு நான் ஒரு நல்ல நண்பன், அவருடன் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளேன்.
அதே போல் சூர்யாவை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்று பொதுவெளியில் பேசிவிட்டார்கள். எனவே அதை பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது.
இயக்குநர் பாலா ஒரு தேசிய விருது பெற்ற இயக்குநர். அவரை பற்றி தெரிந்து தான், தயாரிப்பாளர்கள் படத்திற்கு ஒப்புக்கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் வரும் கருத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வெற்றிமாறனனின் விடுதலை படத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்து போன சண்டை பயிற்சியாளர் வீட்டிற்கு சென்று அவர் துக்கம் விசாரித்தார். மேலும் அவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் வழங்குவோம் என்றும் என்னிடம் தெரிவித்தார்.
ஹாலிவுட் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பாதுகாப்புகள் இன்னும் இல்லை. ஏனென்றால் இது ஒரு சின்ன துறை தான். இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டியது திரைத்துறை சார்ந்த சங்கங்களும், ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கங்களும் தான்” என்றார்.
தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் அடுத்த பாகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பருத்திவீரன் படத்தில் பருத்திவீரன், முத்தழகு ரெண்டு பேரும் செத்து போய்ட்டாங்க.. அவர்களை எங்கே இருந்து கூட்டி வாறது? இது என்ன முனி படமா பார்ட் 1, 2, 3 என்று எடுக்க. பருத்திவீரன் 2 வராது” என்று கலகலப்பாக தெரிவித்தார்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?