Cinema
'வாரிசு' Update : விஜய் படத்தில் இணைந்த சிம்பு.. இருதரப்பு ரசிகர்களும் கொண்டாட்டம் !
விஜயின் வாரிசு சிம்பு இணையவுள்ளதாக வெளியான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. நடிகராக மட்டுமில்லாமல் பல்வேறு மொழிகளில் பாடலும் பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மாஸான கம் பேக் கொடுத்திருக்கும் நடிகர் சிம்பு, தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.
தற்போது 'பத்து தல' படத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் 'தி வாரியர்' படத்தில் இடம்பெற்ற 'புல்லட்..' பாடலை பாடினார். மேலும் ஹாலிவுட் படமான 'டபுள் XL' படத்தில் 'தாலி தாலி..' என்ற பாடலை பாடியுள்ளார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் தற்போது விஜய் படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் முன்னணி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
தெலுங்கு இயக்குநரான வம்சியால் இயக்கப்பட்டு, தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜால் உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 'வரசுடு' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் நடிகர் விஜய், மானசி குரலில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே..' பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்தது. இந்த நிலையில், இந்த படத்தில் மற்றொரு பாடலை நடிகர் சிம்பு பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவரது பாடல்கள் அதிகமானவை ஹிட் ஆகியிருக்கும் நிலையில், இந்த பாடலும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீட்டுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
'வாரிசு' படத்தை பண்டிகை காலங்களில் தெலுங்கு மாநிலங்களில் வெளியிட கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்னையை பேசி சுமூகமாக முடித்து, தெலுங்கு மொழிகளில் வாரிசு திரையிட சிக்கல் இல்லை என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
-
கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!
-
வாக்களித்த மக்களை வேட்டையாடும் வழக்கத்தை பிரதமர் மோடி : பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு முரசொலி கண்டனம்!
-
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறை! : அலட்சியத்தின் உச்சத்தில் த.வெ.க அரசு!
-
உபா சட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!