Cinema
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கார் கண்ணாடி உடைப்பு.. மர்ம நபர்களுக்கு போலிசார் வலைவீச்சு !
பிரபல இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் சிலர் அடித்து உடைத்துள்ளதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழில் பிரபல இயக்குநராக இருப்பவர் ஆர்.கே.செல்வமணி. இவரது மனைவி நடிகை ரோஜா. ஆர்.கே.செல்வமணி தற்போது தமிழ் திரை சங்கமான, பெப்சி அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்து வந்த நிலையில், நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருந்து வருகிறார்.
பெப்சி திரைப்பட அமைப்பின் முன்னாள் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக இருந்து வருகிறார். எனவே, இவர் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் கண்ணாடியை மரம் நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஆந்திராவில் உள்ள அரசியல் மோதலில், இவரது மனைவியும், ஆந்திராவின் அமைச்சருமான ரோஜாவின் கார் கண்ணாடி, அம்மாநில எதிர்க்கட்சியான பவன் கல்யாணின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது.
முன்னதாக நடிகர் விஷால் வீட்டின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரிக்கையில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறால் தவறுதலாக விஷாலின் கண்ணாடி தாக்கப்பட்டதாக தெரிவித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாலியல் புகார் : பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!
-
”போலி வீடியோக்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி பா.ஜ.க” : மல்லிகார்ஜூன கார்கே பதிலடி!
-
தேர்தல் அதிகாரியை தாக்கிய பா.ஜ.க தலைவர் : திரிபுராவில் அராஜகம்!
-
மணிப்பூர் - பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட விவகாரம் :CBI குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!
-
10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? : பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!