Cinema
அடுத்தடுத்து 3 படங்களின் 2-வது பாகங்கள்.. வரும் ஆண்டில் வசூல் நாயகனாகும் கார்த்தி? - எந்தெந்த படங்கள் ?
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. சூர்யா தம்பி கார்த்தி என்று பெயர் மாறி, நடிகர் கார்த்தி என்று கூறினாலே அடையாளம் காணும் அளவிற்கு தனது திறமைகளால் தனி ரசிகர்களை கொண்டு பிரபலமானார்.
நடிப்பு மட்டுமின்றி, விவசாயத்திற்காக உழவன் பௌண்டேஷன் என்ற ஒரு அறக்கட்டளையும் நிறுவி வருகிறார். இதனால் இவர் மீது அனைவர்க்கும் தனி மரியாதையும் இருக்கிறது. சினிமா மீது முழு கவனத்தையும் செலுத்தி வரும் இவருக்கு முதல் படமான பருத்திவீரன் படமே பெரியளவில் ஹிட் கொடுத்தது.
அதன்பிறகு பல படங்கள் நடித்தாலும், அதில் சில படங்களே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. குறிப்பாக பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி என ஹிட் அடித்த படங்களும் ஏறாளம்.
இந்த நிலையில் இந்தாண்டு இவரது நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் 1, சர்தார் என மூன்று படங்கள் வெளியானது. இதில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வனும், சர்தாரும் கார்த்திக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்துள்ளது.
தண்ணீர் திருட்டு பிரச்னையை மையாமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது தற்போது ஹிட் கொடுத்துள்ள நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பிரமோஷன் வீடியோவை வெளியிட்டு 'சர்தார் 2' விரைவில் உருவாகும் என்றும் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கைதி படத்தின் ஹிட்டை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். அதுவும் அடுத்தாண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதோடு அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது சர்தார் படமும் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது.
இதன்மூலம் அடுத்தாண்டு கார்த்தி நடிப்பில் தொடர்ந்து 3 படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகிவுள்ளதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியின் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த 3 படங்களும் தற்போது மாபெரும் ஹிட் கொடுத்திற்கும் நிலையில் அடுத்தாண்டு வசூல் நாயகனாக கார்த்தி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!