Cinema
பெரிய பழுவேட்டரையராக ரஜினி நடித்திருந்தால் நல்லா இருந்துருக்கும்.. ஆனால்..," - சரத்குமார் கூறியது என்ன ?
இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 30-ம் தேதி (நாளை மறுநாள்) உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகிவுள்ளது. ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஸ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என்று திரைபட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், படக்குழுவினர் ப்ரோமோஷனுக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு சோழ சாம்ராஜ்யத்தை பற்றி குறித்து அனைவரும் தெரிந்து கொள்வார்கள். குறிப்பாக அவர்களின் திறமை, கடல் கடந்த வாணிபம், கப்பல் போக்குவரத்தில் சிறந்து விளங்கியது உள்ளிட்டவை தெரியவரும்.
வட இந்தியாவில் இன்னும் கோட்டைகள் உள்ளன. ஆனால் இங்கு இல்லை. அதேபோல் தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா தளமாக இன்னும் மேம்படுத்த வேண்டும். முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலை அனைவரும் பார்க்கும் இடமாக மாற்ற வேண்டும்.
பெரிய பழுவேட்டரையராக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தால் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் உடல்வாகு அந்த அளவுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் சினிமாவில் அனைத்தும் சாத்தியம். எனவே ரஜினிகாந்த் பெரிய பழுவேட்டையராக நடித்திருந்தால் நன்றாகதான் இருந்திருக்கும்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது எனக்கு கூச்சமாக இருந்தது. அதை பார்த்துவிட்டு இயக்குனர் மணிரத்னம் உங்களுக்கு ரொமான்ஸ் வராதா என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு கஷ்டப்பட்டு நான் நடித்தேன்" என்று கூறினார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!