Cinema
youtube பெண் தொகுப்பாளரை ஆபாசமாகப் பேசிய வழக்கு.. பிரபல மலையாள நடிகர் கைது!
மலையாள சினிமாவில் இளம் நடிகர்களின் அதிகம் கவனிக்கப்படுபவராக வளர்ந்து வருகிறார் ஸ்ரீநாத் பாசி. இவர் '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளிங்கி நைட்ஸ்', 'வைரஸ்', உள்ளிட்ட பல நடங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீநாத் பாசி நடிப்பில் கடந்த வெள்ளியன்று 'சட்டம்பி' என்ற புதிய படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரபல youtube சேனல் ஒன்று படம் குறித்து இவருடன் பேட்டி எடுத்துள்ளது.
அப்போது தொகுப்பாளர் கேட்ட கேள்வியால் நடிகர் ஸ்ரீநாத் பாசி கோபமடைந்துள்ளார். மேலும் பேட்டியைப் பாதியில் நிறுத்தி பெண் தொகுப்பாளரை ஆபாசமாகத் திட்டி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீநாத் பாசியைக் கைது செய்துள்ளது. இவர் கைது செய்யப்பட்டுள்ளது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!
-
சிலிண்டர் தட்டுப்பாடு... மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்... சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!