Cinema
youtube பெண் தொகுப்பாளரை ஆபாசமாகப் பேசிய வழக்கு.. பிரபல மலையாள நடிகர் கைது!
மலையாள சினிமாவில் இளம் நடிகர்களின் அதிகம் கவனிக்கப்படுபவராக வளர்ந்து வருகிறார் ஸ்ரீநாத் பாசி. இவர் '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளிங்கி நைட்ஸ்', 'வைரஸ்', உள்ளிட்ட பல நடங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீநாத் பாசி நடிப்பில் கடந்த வெள்ளியன்று 'சட்டம்பி' என்ற புதிய படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரபல youtube சேனல் ஒன்று படம் குறித்து இவருடன் பேட்டி எடுத்துள்ளது.
அப்போது தொகுப்பாளர் கேட்ட கேள்வியால் நடிகர் ஸ்ரீநாத் பாசி கோபமடைந்துள்ளார். மேலும் பேட்டியைப் பாதியில் நிறுத்தி பெண் தொகுப்பாளரை ஆபாசமாகத் திட்டி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீநாத் பாசியைக் கைது செய்துள்ளது. இவர் கைது செய்யப்பட்டுள்ளது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!