Cinema
பிரபல பாடலாசிரியரின் மகள் சடலமாக மீட்பு.. திரைத்துறையினர் அதிர்ச்சி!
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக விளங்குபவர் கபிலன். நடிகர் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். 'ஆள்தோட்ட பூபதி', 'மெர்சலாயிட்டேன்' என 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை கபிலன் எழுதியுள்ளார்.
இவரது மகள் தூரிகை (28). இவர் ஆடை வடிவமைப்பாளராக திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் 'பீயிங் உமன்: என்ற இதழையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி மார்கெட் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல பாடலாசிரியரின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பலரும் பாடலாசிரியர் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
-
140 கோடி மக்களை சொந்தம் கொண்டாட தகுதியானவரா மோடி? : கடந்த 2019 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
-
"கொல்கத்தா அணியின் கேப்டனாக இதுதான் எனது வருத்தம்" - கவுதம் காம்பிர் கூறியது என்ன ?
-
“ஒரு நாளிதழுக்கு இது உகந்ததல்ல” - பொய் செய்தியை பரப்பிய தினமலர் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு !
-
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : உடந்தையாக இருந்த சக மாணவன் : 5 சிறுவர்களின் செயலால் அதிர்ச்சி !