Cinema
கைவிட்ட உறவினர்கள்.. மருத்துவமனை மார்ச்சுவரியில் அனாதையாக கிடக்கும் மலையாள நடிகரின் சடலம்!
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன். இவர் 1967ல் வெளியான 'இந்துலேகா' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அந்த காலத்தில் வெளியான சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
பின்னர் வயது முதிர்வு ஏற்பட்டதை அடுத்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மேலும் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிவந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜ்மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80.
இதையடுத்து இவரது மரணம் குறித்து உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராஜ்மோகன் உடலை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் அவரது உடல் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள கலாச்சாரத்துறை அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ்மோகன் உடலை அரசு சார்பில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!