Cinema
’மைக்கை வீசி அநாகரிமாக நடந்து கொண்டேன்.. மன்னித்து விடுங்கள்..’ - இசை விழாவை பரபரக்க வைத்த பார்த்திபன்!
நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 1) நடைபெற்றது. இதில், படத்தின் இசையமைப்பாளாரான ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்று பாடலை வெளியிட்டிருந்தார்.
அப்போது, மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பார்த்திபனும் பேசுவதாக இருந்தது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மானுடன் பார்த்திபன் உரையாடிக் கொண்டிருக்கையில், பார்த்திபனின் மைக் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யாமல் போயிருக்கிறது.
இதனால் ஆத்திரமான பார்த்திபன், இதை முன்பே கேட்டு சரி செய்திருக்கக் கூடாதா என்று கடுப்பானவர் கையில் இருந்த மைக்கை தூக்கி வீசினார். இந்த செயல் விழா அரங்கில் இருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் சுதாரித்த பார்த்திபன், அநாகரிகமாகவே நடந்து கொண்டேன். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறியிருந்தார். இதனால் பரபரப்பு தணிந்து விழா மீண்டும் தொடர்ந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோதான சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!