Cinema
பாட்டு பாட வந்த ஆண்ட்ரியாவை ஆட்டம் போடச் சொன்னதால் கோபம்.. கோவில் திருவிழாவில் ரசிகர்கள் ரகளை!
சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் வேங்காம்பட்டி கோவில் திருவிழாவின் இறுதி நாளன்று திரையிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் தமிழ் சினிமாவின் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பங்கேற்றிருந்தார். அப்போது அவரை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் திருவிழாவுக்கு படையெடுத்து ஆண்ட்ரியாவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
விழா மேடைக்கு போகும் முன்பே ரசிகர்கள் பட்டாளம் ஆண்ட்ரியாவை சூழ்ந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் மேடையேறிய ஆண்ட்ரியாவை நோக்கி விசிலடித்து ஆரவாரம் செய்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
பின்னர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா உட்பட சில சினிமா பாடல்களை பாடிய ஆண்ட்ரியாவிடம் நடனமாடச் சொல்லி ரசிகர்கள் சிலர் வற்புறுத்தியிருக்கிறார்கள்.
இதனால் ஆண்ட்ரியா கோபமடைந்தார். பின்னர் ஒரேயொரு பாடலை பாடிவிட்டு விழாவில் இருந்து அவர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். இதனிடையே ரசிகர்களின் ரகளை அதிகமானதால் அவர்களை கட்டுப்படுத்த போலிஸார் இறங்கி அவர்களை எச்சரித்து அப்புறப்படுத்தினர்.
Also Read
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!