Cinema
சென்னையில் புதுமனை புகுவிழா கொண்டாடிய மாரி செல்வராஜ்: நேரில் சென்று வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலின்!
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின் மூலம் அடக்குமுறைக்கு ஆளான மக்களின் வாழ்வை திரையில் காண்பித்து வெற்றி இயக்குநராகியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இவர் தற்போது சென்னையில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளார். அந்த புதுமனை புகுவிழா மாரி செல்வராஜின் குருவான இயக்குநர் ராம் முன்னிலையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் பா.ரஞ்சித் என தமிழ் திரையுலகத்தினர் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இப்படி இருக்கையில் மாரி செல்வராஜை அவரது புதிய வீட்டில் சந்தித்த நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Also Read
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!