Cinema
சென்னையில் புதுமனை புகுவிழா கொண்டாடிய மாரி செல்வராஜ்: நேரில் சென்று வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலின்!
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின் மூலம் அடக்குமுறைக்கு ஆளான மக்களின் வாழ்வை திரையில் காண்பித்து வெற்றி இயக்குநராகியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இவர் தற்போது சென்னையில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளார். அந்த புதுமனை புகுவிழா மாரி செல்வராஜின் குருவான இயக்குநர் ராம் முன்னிலையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் பா.ரஞ்சித் என தமிழ் திரையுலகத்தினர் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இப்படி இருக்கையில் மாரி செல்வராஜை அவரது புதிய வீட்டில் சந்தித்த நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!