Cinema
சென்னையில் புதுமனை புகுவிழா கொண்டாடிய மாரி செல்வராஜ்: நேரில் சென்று வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலின்!
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின் மூலம் அடக்குமுறைக்கு ஆளான மக்களின் வாழ்வை திரையில் காண்பித்து வெற்றி இயக்குநராகியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இவர் தற்போது சென்னையில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளார். அந்த புதுமனை புகுவிழா மாரி செல்வராஜின் குருவான இயக்குநர் ராம் முன்னிலையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் பா.ரஞ்சித் என தமிழ் திரையுலகத்தினர் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இப்படி இருக்கையில் மாரி செல்வராஜை அவரது புதிய வீட்டில் சந்தித்த நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!