Cinema
சென்னையில் புதுமனை புகுவிழா கொண்டாடிய மாரி செல்வராஜ்: நேரில் சென்று வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலின்!
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின் மூலம் அடக்குமுறைக்கு ஆளான மக்களின் வாழ்வை திரையில் காண்பித்து வெற்றி இயக்குநராகியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இவர் தற்போது சென்னையில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளார். அந்த புதுமனை புகுவிழா மாரி செல்வராஜின் குருவான இயக்குநர் ராம் முன்னிலையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் பா.ரஞ்சித் என தமிழ் திரையுலகத்தினர் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இப்படி இருக்கையில் மாரி செல்வராஜை அவரது புதிய வீட்டில் சந்தித்த நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!