Cinema
மக்கள் நலமன்றம் பெயரில் உணவு சேவை: நெகிழ்ச்சியடைய வைக்கும் நடிகர் கார்த்தி ரசிகர்களின் செயல் !
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவர் தனது அண்ணனும் நடிகருமான சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனை போன்று உழவன் ஃபவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
அதன் மூலம் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் பல்வேறு நலன்களை நடிகர் கார்த்தி புரிந்து வருகிறார். மேலும் தனது உழவன் ஃபவுண்டேஷன் மூலம் நன்கொடை வழங்குவது விருதுகள் வழங்குவது என பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார் கார்த்தி.
இந்த நிலையில், தனது ரசிகர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அது என்னவெனில், மலிவான விலையில் தரமான உணவுகளை விற்கும்படி அறிவுறுத்தியுள்ளாராம். அவ்வண்ணமே கார்த்தியின் ரசிகர்களும் Karthi Fans club food centre என்ற பெயரில் தள்ளுவண்டியில் வைத்து உணவு கடையை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது. மேலும் கார்த்திக்கும் அவரது ரசிகர்களுக்கும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கார்த்தி ரசிகர்களின் உணவு வண்டியில் சாப்பிடும் மக்களும் அவர்களை பாராட்டுவதில் தவறவில்லை.
Also Read
-
நெல்லையில் 33 திட்டப்பணிகள் திறப்பு; 45,447 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! : முழு விவரம் உள்ளே!
-
“உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!