Cinema
ஆஸ்கர் தகுதி பட்டியலில் ’ஜெய் பீம்’ : அதிகாரப்பூர்வ அறிவிப்பால் மட்டற்ற மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!
94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27ம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் 92 நாடுகளில் இருந்து 366 படங்கள் தேர்வாகியுள்ளது.
இதில் தேர்வாகும் படங்களின் நாமினேஷன் பட்டியல் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து 2 படங்கள் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதில் ஒன்று தமிழ் சினிமாவின் ஜெய் பீம் மற்றும் மலையாள சினிமாவின் மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்மம்.
ஏற்கெனவே சூர்யாவின் ஜெய்பீம் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை குவித்து வந்துள்ள நிலையில் சினிமா உலகின் உயரிய விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய் பீம் இடம்பெற்றுள்ளது தமிழ் திரையுலகுக்கு பெருமையை கொடுத்துள்ளது.
தற்போது சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதுகள் பிரிவில் சூர்யாவின் ஜெய் பீம் தகுதி பட்டியலில் இணைந்துள்ளது. முன்னதாக சூர்யாவின் முந்தைய படமான சூரரைப் போற்று படம் ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!