Cinema
"95 நாட்களுக்குப் பிறகு நடந்த யாஷிகா" : மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கம்!
நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை மாதம் மகாபலிபுரம் அருகே தனது தோழிகளுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அதிவேகமாக கார் ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில், நடிகை யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் உடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சுயநினைவு திரும்பிய யாஷிகாவுக்கு தோழியின் இறப்புச் செய்தி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து "என்னால்தான் நீ என்னோடு இல்லாமல் போவாய் எனும் நிலை வரும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டு வந்திருந்தார்.
இதையடுத்து தொடர்ந்து மூன்று மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா முதல்முறையாக மருத்துவர்கள் உதவியுடன் நடைப்பயிற்சி செய்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா கிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில்,'குழந்தை நடை. 95 நாட்கள் நம்பிக்கை, பிரார்த்தனை மற்றும் உறுதி. விரைவில் எந்தவிதத் துணையும் இன்றி வலிமையாக நடப்பேன் என்று நம்புகிறேன். என்னை மிகவும் நன்றாகக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களுக்கு நன்றி'' என்று யாஷிகா பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, நடிகை யாஷிகா நடைப்பயிற்சி பெற்று வரும் வீடியோ அவரது ரசிகர்கள் வைரலாகி விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!