Cinema
"95 நாட்களுக்குப் பிறகு நடந்த யாஷிகா" : மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கம்!
நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை மாதம் மகாபலிபுரம் அருகே தனது தோழிகளுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அதிவேகமாக கார் ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில், நடிகை யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் உடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சுயநினைவு திரும்பிய யாஷிகாவுக்கு தோழியின் இறப்புச் செய்தி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து "என்னால்தான் நீ என்னோடு இல்லாமல் போவாய் எனும் நிலை வரும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டு வந்திருந்தார்.
இதையடுத்து தொடர்ந்து மூன்று மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா முதல்முறையாக மருத்துவர்கள் உதவியுடன் நடைப்பயிற்சி செய்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா கிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில்,'குழந்தை நடை. 95 நாட்கள் நம்பிக்கை, பிரார்த்தனை மற்றும் உறுதி. விரைவில் எந்தவிதத் துணையும் இன்றி வலிமையாக நடப்பேன் என்று நம்புகிறேன். என்னை மிகவும் நன்றாகக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களுக்கு நன்றி'' என்று யாஷிகா பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, நடிகை யாஷிகா நடைப்பயிற்சி பெற்று வரும் வீடியோ அவரது ரசிகர்கள் வைரலாகி விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
-
பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!