Cinema
நடிகர் சித்தார்த் லண்டன் சென்றது ஏன்? : இயக்குநர் சொன்ன காரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகர் சித்தார்த் லண்டன் சென்றது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில், ‘மகா சமுத்திரம்’ படத்தின் இயக்குனர் அஜய் பூபதி இதுகுறித்து விளக்கியுள்ளார்.
நடிகர் சித்தார்த் நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கில் ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், சர்வானந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் ஆகியோரும் நடித்துள்ளனர். அஜய் பூபதி இயக்கியுள்ளார்.
‘மகா சமுத்திரம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அடுத்த மாதம் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் வெளியாகும் எனது படம் என மகா சமுத்திரம் குறித்து பலமுறை சித்தார்த் பெருமிதமாக குறிப்பிட்டிருந்த நிலையில், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது விவாதங்களைக் கிளப்பியது.
இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள படத்தின் இயக்குனர் அஜய் பூபதி, அறுவை சிகிச்சை ஒன்றுக்காக சித்தார்த் லண்டன் சென்றிருப்பதால், அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!