Cinema
மீண்டும் இணையும் தேவா - தாமஸ் கூட்டணி : மாநாடு’க்கு முன்பே வெளியானது VP-ன் அடுத்த பட அப்டேட் !
1997ல் வெளியாகி ஹிட்டான படம் தான் ‘மின்சார கனவு’. இதில் முதன்மை கதாப்பாத்திரத்தில் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சாமி நடித்திருந்தனர். இவர்களுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி கஜோல் நடித்திருந்தார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கான மவுசு இன்றளவும் குறையாமலேயே இருக்கிறது.
குறிப்பாக பிரபு தேவா மற்றும் அரவிந்த் சாமி காம்போ விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்த காம்போவை 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைக்கவுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
அவர் இயக்கத்தில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வருகிறது. சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கிச்சா சுதீப் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!