Cinema
மீண்டும் இணையும் தேவா - தாமஸ் கூட்டணி : மாநாடு’க்கு முன்பே வெளியானது VP-ன் அடுத்த பட அப்டேட் !
1997ல் வெளியாகி ஹிட்டான படம் தான் ‘மின்சார கனவு’. இதில் முதன்மை கதாப்பாத்திரத்தில் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சாமி நடித்திருந்தனர். இவர்களுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி கஜோல் நடித்திருந்தார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கான மவுசு இன்றளவும் குறையாமலேயே இருக்கிறது.
குறிப்பாக பிரபு தேவா மற்றும் அரவிந்த் சாமி காம்போ விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்த காம்போவை 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைக்கவுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
அவர் இயக்கத்தில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வருகிறது. சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கிச்சா சுதீப் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!