Cinema
இறுதிகட்டப் பணிகளில் இழுபறி.. தள்ளிப்போகும் ரிலீஸ்.. விரைவில் தேதியை மாற்றி அறிவிக்கப்போகும் ‘KGF 2’ டீம்
கன்னட திரையுலகின் பிரம்மாண்ட படமாக வெளியாகி உலகளவில் கவனம் ஈர்த்தது ‘கே.ஜி.எஃப்’. இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது.
இந்த வெற்றியை தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ படம் உருவாகியுள்ளது. ஜூலை மாதம் ரிலீஸுக்கு ப்ளான் செய்யப்பட்ட இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் கொரோனா காரணமாக இழுபறியாக இருப்பதால் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு ஆலோசித்து வருகிறது.
மேலும் கடுமையான ஊரடங்குக்குப் பின்னும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லை. அதனால் உடனடியாக இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை என்பதால் இதன் காரணமாக திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் குறைய வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு இவர்கள் இந்த முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கூடிய விரைவில் ‘கே.ஜி.எஃப் 2’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
வாக்களிக்க விடாமல் இஸ்லாமியர்கள் மீது போலீசார் கொடூரத் தாக்குதல் - தலைவிரித்தாடும் பாஜகவின் அராஜகம்!
-
3 ஆண்டுகள் - திராவிட மாடல் அரசின் 10 மகத்தான சாதனை திட்டங்கள்!
-
தொடர்ந்து அரங்கேறும் நீட் தேர்வு மோசடி... சிக்கிய MBBS மாணவன்... பாஜக ஆளும் மாநிலத்தில் தில்லுமுல்லு !
-
”தமிழ்நாட்டில் தடையின்றி சீரான மின்சாரம்” : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!
-
”3 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகள்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!