Cinema
இறுதிகட்டப் பணிகளில் இழுபறி.. தள்ளிப்போகும் ரிலீஸ்.. விரைவில் தேதியை மாற்றி அறிவிக்கப்போகும் ‘KGF 2’ டீம்
கன்னட திரையுலகின் பிரம்மாண்ட படமாக வெளியாகி உலகளவில் கவனம் ஈர்த்தது ‘கே.ஜி.எஃப்’. இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது.
இந்த வெற்றியை தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ படம் உருவாகியுள்ளது. ஜூலை மாதம் ரிலீஸுக்கு ப்ளான் செய்யப்பட்ட இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் கொரோனா காரணமாக இழுபறியாக இருப்பதால் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு ஆலோசித்து வருகிறது.
மேலும் கடுமையான ஊரடங்குக்குப் பின்னும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லை. அதனால் உடனடியாக இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை என்பதால் இதன் காரணமாக திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் குறைய வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு இவர்கள் இந்த முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கூடிய விரைவில் ‘கே.ஜி.எஃப் 2’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !