Cinema
இறுதிகட்டப் பணிகளில் இழுபறி.. தள்ளிப்போகும் ரிலீஸ்.. விரைவில் தேதியை மாற்றி அறிவிக்கப்போகும் ‘KGF 2’ டீம்
கன்னட திரையுலகின் பிரம்மாண்ட படமாக வெளியாகி உலகளவில் கவனம் ஈர்த்தது ‘கே.ஜி.எஃப்’. இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது.
இந்த வெற்றியை தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ படம் உருவாகியுள்ளது. ஜூலை மாதம் ரிலீஸுக்கு ப்ளான் செய்யப்பட்ட இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் கொரோனா காரணமாக இழுபறியாக இருப்பதால் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு ஆலோசித்து வருகிறது.
மேலும் கடுமையான ஊரடங்குக்குப் பின்னும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லை. அதனால் உடனடியாக இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை என்பதால் இதன் காரணமாக திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் குறைய வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு இவர்கள் இந்த முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கூடிய விரைவில் ‘கே.ஜி.எஃப் 2’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”