Cinema
36 ஆண்டுகள் கழித்து இந்தியில் ரீமேக் ஆகும் 'ஆண் பாவம்' ?
1985ல வெளியான படம் `ஆண் பாவம்'. இயக்குநர் பாண்டியராஜனின் இரண்டாவது படமாக உருவானது. கூடவே இந்தப் படம் மூலமாக தான் நடிகராக அறிமுகமானார் பாண்டியராஜன். இந்தப் படம் இப்போது வரை ரசிகர்கள் மத்தியில மிகப் பிரபலமான ஒன்று.
36 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகப் போறதாக ஒரு செய்தி உலவிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இந்தப் படத்தை பாண்டியராஜன் அவருடைய மகன் ப்ரித்வியை நடிக்க வைத்து ரீமேக் செய்வதாக பல வருடம் முன்பு சொல்லப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
இப்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களாக, அஜய் தேவ்கனும் - அக்ஷய் குமாரும் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தி சினிமாவின் கமர்ஷியல் படங்கள் கொடுப்பதில் கிங் ரோஹித் ஷெட்டி, அவர் தான் இந்த ரீமேக்கை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. சம்பந்தப்பட்ட நபர்கள்தான் இதை உறுதிபடுத்த வேண்டும்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!