Cinema
“மாஸ்க் அணிந்தபடிதான் படம் பார்க்கவேண்டும்” : திரையரங்குகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
இந்தியாவில் கொரோனா பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்று வரை ஆறு மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகளை வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளதால் திரையரங்குகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
- சினிமா திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். 
- பார்வையாளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். 
- அனைவரும் மாஸ்க் அணிந்தபடிதான் படம் பார்க்க அனுமதிக்க வேண்டும். 
- பார்வையாளர்கள் உள்ளே செல்லும்போது அனைவருக்கும் சானிடைசர் வழங்கவேண்டும். 
- ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு முன்பாக முழுமையாகக் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். 
- ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடைவெளி விட்டு அமர வேண்டும் மேலும் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. 
- பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே விற்க அனுமதி. 
- பட இடைவேளையின் போது பார்வையாளர்கள் இருக்கைகளை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 
- கொரோனா விழிப்புணர்வு காணொளிகளைப் பட இடைவெளியின் போது ஒளிபரப்ப வேண்டும். 
- திரையரங்குகளின் உள்ளே, ஏ.சியில் 24 முதல் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான அளவை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும். 
- மக்கள் ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதை ஊக்குவிக்க வேண்டும். 
Also Read
- 
	    
	      பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !