Cinema
ஊரடங்கு காலத்தை சிறப்பான முறையில் பயன்படுத்திய நடிகர் அஜித்! - என்ன செய்தார் தெரியுமா?
கொரோனா கால ஊரடங்கு பலரை வீட்டுக்குள்ளேயே முடக்கியது. இதற்கு பெரும் அரசியல்வாதிகளிலிருந்து, சினிமா நடிகர்கள் வரை எவரும் விதிவிலக்கல்ல.
பலர் தங்கள் வாழ்நாளில் சந்தித்திராத வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த அனுபவத்தை எதிர்கொள்ள முடியாமல் டி.வி, வெப் சீரிஸ் என மூழ்கி இருக்க, சிலர் மட்டும் இந்த காலகட்டத்தை மிகுந்த பயனுள்ளதாக புதிய நல்ல பழக்கங்களை, புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள பயன்படுத்தியுள்ளனர்.
அப்படி தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜித், இந்த ஊரடங்கு காலத்தை ஒரு மலர் பூங்கா அமைப்பதற்காகச் செலவழித்துள்ளார். எப்போதும் ஏதோ ஒரு புதிய துறையில் ஆர்வம் ஏற்பட்டு அத்துறையை பற்றி கற்றுக்கொண்டு பின்பு அதில் தன் திறமையை வளர்த்துக்கொள்ளும் அஜித் இந்த தடவை பூங்கா அமைப்பதை தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த ஊரடங்கு காலத்தில் தன் வீட்டின் பின்பக்கம் உள்ள இடத்தை பூத்துக்குலுங்கும் நந்தவனமாக மாற்றியுள்ளார் அஜித். அந்தப் பூங்காவில் 75 வகையான மலர் இனங்களை அஜித் வளர்த்துள்ளார்.
ஐஐடியின் தக்ஷா என்ற குழுவுக்கு ஆலோசகராக உள்ள அஜித் அந்த அணியின் மூலம் கொரோனா பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கும் டிரோனை வடிவமைத்துத் தந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்ட அப்படப்படிப்பை, தொற்று குறைந்த பிறகு மீண்டும் வைத்துக்கொள்ளலாம் என அஜித் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!
-
“1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 சிறப்பு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்...” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!