Cinema
ஊரடங்கு காலத்தை சிறப்பான முறையில் பயன்படுத்திய நடிகர் அஜித்! - என்ன செய்தார் தெரியுமா?
கொரோனா கால ஊரடங்கு பலரை வீட்டுக்குள்ளேயே முடக்கியது. இதற்கு பெரும் அரசியல்வாதிகளிலிருந்து, சினிமா நடிகர்கள் வரை எவரும் விதிவிலக்கல்ல.
பலர் தங்கள் வாழ்நாளில் சந்தித்திராத வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த அனுபவத்தை எதிர்கொள்ள முடியாமல் டி.வி, வெப் சீரிஸ் என மூழ்கி இருக்க, சிலர் மட்டும் இந்த காலகட்டத்தை மிகுந்த பயனுள்ளதாக புதிய நல்ல பழக்கங்களை, புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள பயன்படுத்தியுள்ளனர்.
அப்படி தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜித், இந்த ஊரடங்கு காலத்தை ஒரு மலர் பூங்கா அமைப்பதற்காகச் செலவழித்துள்ளார். எப்போதும் ஏதோ ஒரு புதிய துறையில் ஆர்வம் ஏற்பட்டு அத்துறையை பற்றி கற்றுக்கொண்டு பின்பு அதில் தன் திறமையை வளர்த்துக்கொள்ளும் அஜித் இந்த தடவை பூங்கா அமைப்பதை தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த ஊரடங்கு காலத்தில் தன் வீட்டின் பின்பக்கம் உள்ள இடத்தை பூத்துக்குலுங்கும் நந்தவனமாக மாற்றியுள்ளார் அஜித். அந்தப் பூங்காவில் 75 வகையான மலர் இனங்களை அஜித் வளர்த்துள்ளார்.
ஐஐடியின் தக்ஷா என்ற குழுவுக்கு ஆலோசகராக உள்ள அஜித் அந்த அணியின் மூலம் கொரோனா பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கும் டிரோனை வடிவமைத்துத் தந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்ட அப்படப்படிப்பை, தொற்று குறைந்த பிறகு மீண்டும் வைத்துக்கொள்ளலாம் என அஜித் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!