Cinema
சூர்யாவுக்காக தயாராகும் கமல் கதை - கவுதம் மேனன் ஓபன் டாக்
பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு கடந்த வாரம் வெளியாகியுள்ளது கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, செந்தில் வீராசாமி, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
ENPT படம் வெளிவர பெரிதும் உதவியாக இருந்தது ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம். ஆகையால் வேல்ஸ் ஃபிலிம்ஸின் பேனரில் வருண் நடிக்கும் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனுஷ்கா நடிப்பிலான படத்தை இயக்கவுள்ளார் கவுதம் மேனன். இதனையும் வேல்ஸ் ஃபிலிம்ஸே தயாரிக்கவுள்ளது.
இதற்கிடையில், சூர்யா - கவுதம் மேனன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், கவுதம் மேனன் தான் தயார் செய்து வைத்திருக்கும் கதை ஒன்றை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில், கமல் - காதம்பரி ஆகிய இருவரும் இசைத்துறையைச் சேர்ந்தவர்கள். இருவரும் இசையால் சந்திப்பதால் பாடல், இளையராஜா என படம் பயணிக்க இருக்கிறது. அவர்களின் காதல் வெற்றியடைந்ததா இல்லையா என்பதே மீதிக்கதை. இது சூர்யாவுக்கு பிடித்திருந்தால் நல்ல படமாக உருவாகும் என கவுதம் மேனன் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தி இணையத்தில் பரவியதை அடுத்து, சூர்யா மற்றும் கவுதம் மேனன் கூட்டணி உருவாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
Also Read
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !