Cinema
சூர்யாவுக்காக தயாராகும் கமல் கதை - கவுதம் மேனன் ஓபன் டாக்
பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு கடந்த வாரம் வெளியாகியுள்ளது கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, செந்தில் வீராசாமி, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
ENPT படம் வெளிவர பெரிதும் உதவியாக இருந்தது ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம். ஆகையால் வேல்ஸ் ஃபிலிம்ஸின் பேனரில் வருண் நடிக்கும் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனுஷ்கா நடிப்பிலான படத்தை இயக்கவுள்ளார் கவுதம் மேனன். இதனையும் வேல்ஸ் ஃபிலிம்ஸே தயாரிக்கவுள்ளது.
இதற்கிடையில், சூர்யா - கவுதம் மேனன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், கவுதம் மேனன் தான் தயார் செய்து வைத்திருக்கும் கதை ஒன்றை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில், கமல் - காதம்பரி ஆகிய இருவரும் இசைத்துறையைச் சேர்ந்தவர்கள். இருவரும் இசையால் சந்திப்பதால் பாடல், இளையராஜா என படம் பயணிக்க இருக்கிறது. அவர்களின் காதல் வெற்றியடைந்ததா இல்லையா என்பதே மீதிக்கதை. இது சூர்யாவுக்கு பிடித்திருந்தால் நல்ல படமாக உருவாகும் என கவுதம் மேனன் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தி இணையத்தில் பரவியதை அடுத்து, சூர்யா மற்றும் கவுதம் மேனன் கூட்டணி உருவாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!