Cinema
நயன்தாராவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் படக்குழு - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விக்னேஷ் சிவனின் நெற்றிக்கண் படக்குழுவினர் நயன்தாராவின் பிறந்த நாளை கொண்டாடிய விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா, தனது 35வது பிறந்த நாளை நேற்று (நவ.18) காதலர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் கொண்டாடினார்.
இதற்கிடையே, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதனை மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நெற்றிக்கண் படக்குழுவினர் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர்.
இது நயன்தாரா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், அன்னதானம் செய்த போட்டோவையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !