Cinema
‘சிங்கப்பெண்ணே’ ஸ்பெஷல் ஷோ... பெண்கள் குழந்தைகளுக்காக ‘பிகில்’ சிறப்புக் காட்சி!
விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகிவரும் படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாக இருக்கிறது.
‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சுமார் 180 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இந்துஜா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் நாளை திரைக்கு வருகிறது.
ஏற்கனவே படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியிடப்பட்ட படத்தின் டீஸர், சிங்கப்பெண்ணே, வெறித்தனம், உனக்காக ஆகிய பாடல்கள் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
‘பிகில்’ படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதால் பெண்களுக்கென ஸ்பெஷல் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பாபு சினிமாஸில் நாளை மறுதினம் (அக்டோபர் 26) பிற்பகல் 2 மணிக் காட்சிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான விஜய்யின் ‘சர்கார்’ படத்திற்கு சென்னை திருவான்மியூரில் இது போன்றதொரு பெண்களுக்கான சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதும் பாடச்சொல்வது மதவெறியின் உச்ச அக்கிரமம்: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்!
-
“பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” : வள்ளலார் விழாவில் முதல்வர் உரை!
-
இனி சென்னை மத்திய கைலாஷில் நெரிசல் இல்லை..! - ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் திறப்பு!
-
ஈரோட்டில் ‘நொய்யல்’ - இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல்! : ரூ.68 கோடி ஒதுக்கீடு!
-
ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!