Cinema
நடிகை யாஷிகா ஆனந்த் கார் மோதி இளைஞர் படுகாயம்? குடி போதையில் விபத்து ஏற்பட்டதா? - போலிஸ் விளக்கம்!
கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர், ராஜ பீமா, இவன் தான் உத்தமன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.
இந்நிலையில் நேற்று (அக்.,5) நள்ளிரவின் போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிங்டன் சாலை வழியாக வந்த சொகுசு கார் ஒன்று, அந்த பகுதியின் சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த உணவு டெலிவரி செய்யும் பரத் என்ற இளைஞர் மீது மோதியுள்ளது.
இதனால் அந்த இளைஞர் படுகாயமுற்றதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஹாரிங்டன் சாலையில் உள்ள சாலையோரக் கடை ஒன்றும் சேதமடைந்தது.
இதனையடுத்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நுங்கம்பாக்கம் போலிஸார் விசாரித்து வருகின்றனர். இதில், சொகுசு காரில் வந்தது நடிகை யாஷிகா ஆனந்த் என்றும், விபத்து ஏற்பட்டதும் அவர் வேறு வாகனத்தில் மாறிச் சென்று விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
மேலும், சொகுசு காரில் வந்தவர்கள் போதையில் இருந்ததாகவும், யாஷிகாவும் மது அருந்தியிருந்தாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் நடிகை யாஷிகா இருந்ததாக கூறப்படுவது வெறும் வதந்தி தான். விபத்து ஏற்படுத்திய சொகுசு காரில் யாஷிகா இருக்கவில்லை என்று போலிஸ் தரப்பு கூறியுள்ளது.
Also Read
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !
-
2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!
-
“நமக்கும் அவர்களுக்குமான வாக்கு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே!” : தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“பச்சைக் கொடிக்கும் பச்சைப்பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல்..!” : முரசொலி தலையங்கம்!
-
🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!