Cinema
படப்பிடிப்புக்கு தடை விதித்த நீதிமன்றம்... அதிரடி முடிவெடுத்த கே.ஜி.எஃப்-2 படக்குழு..!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் படம் கே.ஜி.எஃப். கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இந்தப் படம் யாரும் எதிர்பாராத வகையில், 200 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்தது.
தற்போது கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகும் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.
இப்படத்தின் கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுப்புறசூழல் மாசுபடுகிறது என சமூக ஆர்வலர் சீனிவாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அப்பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கே.ஜி.எஃப் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் எஞ்சிய படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
Also Read
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!