Cinema
மீண்டும் காதலில் சிம்பு? - முன்னாள் காதலியின் மனதை உருகவைத்த சிம்புவின் அந்த புகைப்படம்!
நடிகர் சிம்புவுக்கு இந்த வருட ஓபனிங் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’. இந்தப் படம் பெரியதாக செல்ஃப் எடுக்கவில்லை. இந்த வருடம் மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே சிம்புவுக்கு பெரிதாக எந்த படமும் வெளியாகவில்லை.
தற்பொழுது, கன்னட ரீமேக் படமான மஃப்டியில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துவருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்திலும் சிம்பு இல்லை. அதற்கு பதிலாக மகாமாநாடு என்கிற படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். அதுவும் டேக் ஆப் ஆவதாக தெரியவில்லை.
இப்படித்தான், சில வருடங்களுக்கு முன்பு, இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு ‘வேட்டையன்’ என்கிற படத்தில் நடிப்பதாக இருந்தது. மாநாடுக்கு நடந்தது போல கசப்பான அனுபவத்தால் அந்தப் படமும் கைவிடப்பட்டது. அதற்கு போட்டியாக, வேட்டை மன்னன் என்கிற படத்தை துவங்கினார் சிம்பு. அதுவும் இப்போது வரை என்ன ஆனதென்றே தெரியவில்லை.
இப்படியான சிம்புவின் வாழ்க்கையில், ஒரு புகைப்படம் ஓர் அழகிய அலை, வருடிச் சென்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். சமீபத்தில் குடும்பத்துடன் சிம்பு இருக்கும் புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் அனைவரும் ஜோடியாக இருக்க, சிம்பு மட்டும் தனியாக இருந்தார்.
தாய், தந்தையுடன், தம்பி குரளரசனும் அவரது மனைவியும், தங்கை இலக்கியாவும் அவருடைய கணவரும் இருந்தனர். ஆனால் சிம்பு மட்டும் ’சிங்கிளாக’ இருக்கும் அந்த புகைப்படத்தைப் பார்த்து, சிம்புவின் முன்னாள் காதலி மனம் உருகிப் பேசியிருக்கிறாராம். அந்த பேச்சு நீண்டு மீண்டும் காதலாக மலரவும் வாய்ப்பிருப்பதாக தகவல் உலாவுகிறது.
Also Read
-
“IPL போல அதிமுகவில் APL போட்டி நடத்தலாம்” - அதிமுகவின் பல அணிகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் கிண்டல்!
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!