Cinema
நடிகர் சங்கத் தேர்தல் : வாக்குகளை எண்ண அனுமதியளிக்க உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளியில் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டதை எதிர்த்தும், வாக்குகளை எண்ணக் கோரியும் நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முன்னதாக, பதிவாளர் உத்தரவுக்கு எதிரான விஷாலின் வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என்றும், வாக்குப்பெட்டிகளை பாதுகாத்து வைக்கவும் ஜூன் 21ம் தேதியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது, இந்த வழக்கில் ஜெயமணி, சுமதி, சாந்தி உள்ளிட்ட 10 நடிகர் சங்க உறுப்பினர்கள் வழக்கில் இணைக்கக் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அனுமதி அளித்த நீதிபதி 12ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதற்கிடையில் பதிவான வாக்குகளை எண்ணக் கோரிய விஷாலின் மனுவை ஏற்க நீதிபதி ஆதிகேசவலு மறுத்துவிட்டார்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி