Cinema
நிறைவடைந்தது நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு !
நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர் நாசர் தலைமையின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.
நடிகர்கள் விஷால், கே.பாக்யராஜ், நாசர், ஆர்யா, சிபி, பாண்டியராஜன், பிரசாந்த். உதயா, சூர்யா, விஜய், ஆசியா. கவுன்டமணி, செந்தில், சந்தானம், நாசர், ராம்கி, சாந்தனு, பொன்வண்ணன், சார்லி, சுந்தர்.சி, ரமேஷ் கண்ணா, ராஜேஷ், சின்னி ஜெயந்த், மனோபாலா, விதார்த், அருண்பாண்டியன். நடிகைகள் குஷ்பு, சங்கீதா, சரண்யா, வடிவுக்கரசி, ஆர்த்தி, கோவை சரளா, காயத்ரி, குட்டி பத்மினி, கே.ஆர்.விஜயா, லதா, அம்பிகா, ராதா, ஷீலா உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் வாக்கு பதிவு செய்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 1579 பேர் இதுவரை வாக்குகளை பதிவு செய்தனர். 85 சதவிகித வாக்குகள் இதுவரை பதிவாகியிருக்கிறது.இந்த வாக்குப்பதிவுகள் பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!