Cinema
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: தமிழக அரசுக்கும், விஷாலுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக தனி அதிகாரியை நியமித்தது தமிழக வணிகவரித்துறை
தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனி அதிகாரி நியமனத்துக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்துவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆகையால், இந்த இரண்டு வழக்கையும் ஒன்றிணைத்து, விசாரணைக்கு பட்டியிலிட உத்தரவிட்ட நீதிபதி ஆதிகேசவலு, சங்கத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக பத்திரப்பதிவுத் துறை செயலாளர், தலைவர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், தனி அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!