Cinema
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: தமிழக அரசுக்கும், விஷாலுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக தனி அதிகாரியை நியமித்தது தமிழக வணிகவரித்துறை
தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனி அதிகாரி நியமனத்துக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்துவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆகையால், இந்த இரண்டு வழக்கையும் ஒன்றிணைத்து, விசாரணைக்கு பட்டியிலிட உத்தரவிட்ட நீதிபதி ஆதிகேசவலு, சங்கத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக பத்திரப்பதிவுத் துறை செயலாளர், தலைவர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், தனி அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!