Cinema
மொக்கை போடும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ : கடைசி சீசனை மீண்டும் எடுக்க ரசிகர்கள் வேண்டுகோள்!
உலகம் முழுக்க சக்கைப்போடு போட்டுவரும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வாராவாரம் பரபரப்போடு வெளியாகும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் இந்த ஆண்டோடு நிறைவடைய இருப்பதால் இந்த சீசன் எதிர்பாராத திருப்பங்களோடு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இல்லாமல், இந்த சீசனில் இதுவரை வெளியான எபிஸோடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. பாத்திரப் படைப்புகள் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடைசி 2 எபிஸோடுகள் ரசிகர்களை வெகுவாக ஏமாற்றத்திற்குள்ளாக்கின.
இந்நிலையில், இந்த சீசனை மீண்டும் எடுக்கவேண்டும் என ரசிகர்கள் எச்பிஓ நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். Change.org எனும் இணையதளம் மூலம் ஆன்லைன் மனு ஒன்றில் கையெழுத்திட்டு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் எச்பிஓ நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளனர்.
ஆர்.ஆர். மார்ட்டின் எழுதிய கதையை மையமாக வைத்து டேவிட் பெனிஃப் மற்றும் டி.பி வெய்ஸ் ஆகியோர் இந்த சீசனுக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். அவர்கள் இருவருக்குப் பதிலாக வேறு யாரையாவது பயன்படுத்தி கடைசி சீசனுக்கான திரைக்கதையை எழுதவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!