Cinema
மொக்கை போடும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ : கடைசி சீசனை மீண்டும் எடுக்க ரசிகர்கள் வேண்டுகோள்!
உலகம் முழுக்க சக்கைப்போடு போட்டுவரும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வாராவாரம் பரபரப்போடு வெளியாகும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் இந்த ஆண்டோடு நிறைவடைய இருப்பதால் இந்த சீசன் எதிர்பாராத திருப்பங்களோடு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இல்லாமல், இந்த சீசனில் இதுவரை வெளியான எபிஸோடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. பாத்திரப் படைப்புகள் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடைசி 2 எபிஸோடுகள் ரசிகர்களை வெகுவாக ஏமாற்றத்திற்குள்ளாக்கின.
இந்நிலையில், இந்த சீசனை மீண்டும் எடுக்கவேண்டும் என ரசிகர்கள் எச்பிஓ நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். Change.org எனும் இணையதளம் மூலம் ஆன்லைன் மனு ஒன்றில் கையெழுத்திட்டு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் எச்பிஓ நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளனர்.
ஆர்.ஆர். மார்ட்டின் எழுதிய கதையை மையமாக வைத்து டேவிட் பெனிஃப் மற்றும் டி.பி வெய்ஸ் ஆகியோர் இந்த சீசனுக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். அவர்கள் இருவருக்குப் பதிலாக வேறு யாரையாவது பயன்படுத்தி கடைசி சீசனுக்கான திரைக்கதையை எழுதவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!