Cinema
அவதூறு பேசுபவர்கள் பற்றி கவலை படாதீர்கள் - ராகவா லாரன்ஸ்
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடிகர் தன்னை மறைமுகமாக விமர்ச்சிப்பதாக ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து இயக்குநர் சீமான், ராகவா லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்து இருந்தார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ராகவா லாரன்ஸை கடுமையாக விமர்ச்சித்தர். இதனையடுத்து, சுரேஷ் காமாட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'காஞ்சனா 3' படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள். எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மும்பையில் 'காஞ்சனா' இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம்" என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Also Read
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!