Cinema
“சிம்புவுக்கு விரைவில் டும் டும் டும்” - டி.ராஜேந்தர் சூசகம்
இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசனின் திருமண விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இச்சந்திப்பில் தி.மு.க.வின் எம்.பி. கனிமொழி உடனிருந்தார்.
பின்னர் பேட்டியளித்த டி.ராஜேந்தர்,
வருகின்ற ஏப்ரல் 29ல் நடைபெற இருக்கும் என்னுடைய இளைய மகன் குறளரசனின் திருமணத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக மரியாதை நிமித்தமாக தளபதி மு.க.ஸ்டாலினை சந்தித்தேன்.
இதற்கு முன்பு என் மகள் இலக்கியாவின் திருமணத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தேன். அப்போது, தலைவர் கலைஞரும், தளபதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் எனக்கு தாய் கழகம். நான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவன் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், எனது மூத்த மகன் சிம்பு (எஸ்.டி.ஆர்) ஒரு முடிவெடுத்திருக்கிறார். அவருடன் நடித்த பெண்ணை விட அவருக்கு பிடித்த பெண்ணை மணமுடிக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். ஆகவே சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!