மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து, வெள்ளித்திரைக்கு வந்தார். ’மாரி’, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வேலைக்காரன், புலி, விஸ்வாசனம் உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.
கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் ரோபோ சங்கர், தீவிர சிகிச்சைக்கு பிறகு நலம்பெற்றார். இதனைத் தொடர்ந்து படங்களில் மீண்டும் நடத்து வந்தார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 2 நாள்களாக வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவரது உயிர் பிரிந்தது. அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.