தமிழ்நாடு

பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் - செல்வப்பெருந்தகை விமர்சனம் !

பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு  அல்வா கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் - செல்வப்பெருந்தகை விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் விலகி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, " 117 லட்சம் கோடி கடன் வாங்கி மக்கள் மீது சுமையை ஏற்றி இருக்கிறார் பிரதமர் மோடி. இப்போது திடீரென எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது பற்றாக பேசி வருகிறார். இதனை பார்த்தால் அதிமுகவுக்கு மாயவலை வீசுகிறார்களா என சந்தேகம் இருக்கிறது. ஆனால் அண்ணாமலை ஜெயலலிதாவை ஏற்கனவே விமர்சித்து இருந்தார். பிரதமர் மோடி திருநெல்வேலி அல்வா நன்றாக இருக்கும் எனக்கூறி தமிழ்நாட்டு மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்

இந்தியா கூட்டணி மீது அமலாக்கதுறை, சி.பி.ஐ வைத்து மிரட்ட நினைக்கின்றனர். இந்தியா கூட்டணியில் யாரேனும் இணைந்தால் அவர்கள் மீது உண்மைக்கு புறம்பான வழக்கு தொடுக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் மல்லிகார்ஜின கார்கே சென்னை வர உள்ளார் என்றும் கூடிய விரைவில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் இருக்கிறது

பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு  அல்வா கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் - செல்வப்பெருந்தகை விமர்சனம் !

கடந்த தேர்தலை விட அதிக இடங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியா தனித்து போட்டிய என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்கிறது. அதன்படி தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் அகில இந்திய வழிகாட்டுதலோடு முடிவு செய்யும். அகில இந்திய தலைமை வழிகாட்டுதலோடு தொகுதிப்பங்கீட்டை உறுதி செய்வோம்.

பாஜக தமிழகத்தில் மலர வாய்ப்பு இல்லை. இந்தியாவில் வறுமையை ஒழித்தது காங்கிரஸ் கட்சி தான். மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி இருவரும் அண்ணன் தம்பி போல் பழகி வருகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி காத்திருக்கவில்லை. 2014ல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாடு குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். தமிழகத்தில் தொகுதி ஒப்பந்தம் செய்ய அவகாசம் இருக்கிறது" என்று கூறினார்.

    banner

    Related Stories

    Related Stories