தமிழ்நாடு

”ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி”.. திராவிட மாடல் ஆட்சியின் முத்தாய்ப்பான 10 சாதனை திட்டங்கள்!

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

”ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி”..  திராவிட மாடல் ஆட்சியின் முத்தாய்ப்பான 10 சாதனை திட்டங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு 10 ஆண்டுகள் இருண்டு கிடந்தது. இதையடுத்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் தி.மு.க மட்டும் 133 தொகுதிகளில் வரலாற்று வெற்றி பெற்றது.

இதையடுத்து மே 7ம் தேதி “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…” என்ற சிங்கக் குரலுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்றைய தினமே மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம் கோப்பில் கையெழுத்திட்டார். அதிலிருந்து இருண்டு கிடந்த தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் கிடைத்து விட்டது.

இந்நிலையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இரண்டு ஆண்டில் உலகமே ஆச்சரியப்பட்டுப் பார்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படுத்தியுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

இந்த இரண்டு ஆண்டில் தி.மு.க அரசு கொண்டு வந்த முத்தாய்ப்பான 10 சாதனை திட்டங்களை இங்குப் பார்ப்போம்:-

”ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி”..  திராவிட மாடல் ஆட்சியின் முத்தாய்ப்பான 10 சாதனை திட்டங்கள்!
”ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி”..  திராவிட மாடல் ஆட்சியின் முத்தாய்ப்பான 10 சாதனை திட்டங்கள்!

1.கட்டணமில்லா பேருந்து

ரூ.4,426 கோடியில் 276 கோடி முறை மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் செய்துள்ளனர். மேலும் ரூ.254 கோடியில் 15.87 லட்சம் முறை திருநங்கைகள் பயணம் செய்துள்ளது. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.888 சேமிப்பு.

2. புதுபைப் பெண் திட்டம்

புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் ரூ.350 கோடியில் 2.09 லட்சம் மாணவியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

3. மகளிர் மேம்பாடு

செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட உள்ளது. அதேபோல் 8,57,979 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.47,034 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

4. நான் முதல்வன் திட்டம்

முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 8,11,879 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் 4,60,734 பொறியியல் கல்லூரி மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

5.இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உலகத் தமிழர்கள் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ‘கீழடி அருங்காட்சியகம்’அமைக்கப்பட்டுள்ளது.

”ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி”..  திராவிட மாடல் ஆட்சியின் முத்தாய்ப்பான 10 சாதனை திட்டங்கள்!
”ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி”..  திராவிட மாடல் ஆட்சியின் முத்தாய்ப்பான 10 சாதனை திட்டங்கள்!
”ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி”..  திராவிட மாடல் ஆட்சியின் முத்தாய்ப்பான 10 சாதனை திட்டங்கள்!

6. தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும்

222 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2,72,322 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,09,651 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

7. வேலைவாய்ப்பு முகாம்கள்

1241 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம்1,44,961 பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

8.விவசாயிகள் நலன்

31.53 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.23,127 கோடி பயிர்க்கடன், 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 5.36 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி

9. மக்கள் நல்வாழ்வு

ரூ.3,185 கோடியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - 58.27 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில் 1.51 லட்சம் நபர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

10. விளையாட்டு மேம்பாடு

ரூ.114 கோடியில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி உலகத்தையே ஆச்சரியப்பட வைத்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

மேலும், கோட்டையில் தீட்டுகிற திட்டங்கள் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தைத் தொடங்கி இதுவரை நான்கு கட்டங்களில், 16 மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இப்படி சொன்னதை மட்டுமல்ல சொல்லாத திட்டங்களை செயல்படுத்தி மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது தி.மு.க அரசு.

banner

Related Stories

Related Stories